Selva

Selva
Kodai Tour

Saturday 19 February 2011

இந்த வார செய்தி

இந்த வார செய்தி 

                                         இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் உயிர் இழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது . தமிழக முதல்வர் கடிதம் எழுதுவது, பாரத பிரதமர் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதும் நமக்கு சாதாரண செய்தியாகி விட்டது . அதிலும் இப்பொழுது அனைத்து கட்சிகளும் வரிந்து கட்டிகொண்டு போராட்டம் நடத்துவது ஆதித்யா தொலைக்காட்சியில் வரும் நகைச்சுவையை தாண்டிவிட்டது. இந்த சில மாதங்களாக  தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் அவதி படுகிறார்களோ?.அதற்கு முன்பு ? . இல்லை ஏனென்றால் தேர்தல் வருகிறது ! இன்னும் எவ்வளவு நடக்க போகிறதோ ? அதற்குத்தான் அண்ணா அன்றே எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சொன்னாரோ ! . சரி சரி அனைத்து கட்சியனரும் அவர்களது நகைச்சுவையை நடத்தட்டும். சிரித்து கொண்டே இருந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும் என்பது மருத்துவ அறிவுரை. அரசியல் கட்சியனருக்கு சுய நலத்திலும் ஒரு பொதுநலம். மக்களை சிரிக்க வைக்கிறார்கள் . தமிழக மக்களே ! நமக்கு நிறைய வேலை இருக்கிறது.தினம் ஒரு செய்தி வரும் .அதனை உட்கார்ந்து வெட்டி கதை பேச வேண்டும் .  உலக கோப்பை கிரிக்கெட் நடக்கிறது. நாம் அதை தெருவில் நின்று ஸ்கோர் பார்க்க வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் வீரர்கள் கோடி கோடிகளாக சம்பாதிப்பார்கள். அரசியல்வாதிகள் மட்டும் சம்பாதித்தால் போதுமா? யாராவது எப்படியாவது போகிறார்கள் .  நாம் சந்தோசமாக இருப்போம் .  என்ன சரிதானே ?                                                                                                                                        ( அது சரி எகிப்தில் என்னவோ புரட்சி நடக்கிறதாமே ! வேலை இல்லாதவர்கள் !! )   -- கே. செல்வா ...

1 comment:

  1. மீளும் நம் இனம் இவர்களை போன்றவர்களிடம் இருந்து .....

    ReplyDelete