என்னை பாதித்த டாக்டர் .கே .சொக்கலிங்கம் அவர்களின் மரணம்
நான் பணிபுரியும் மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.கே.சொக்கலிங்கம் அவர்கள் சாலை விபத்தில் (மே 30,2011)அகால மரணமடைந்தார்.
அவர் பணிவானவர். கனிவானவர் . தட்டி கொடுத்து வேலை வாங்குவார்.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள் . மரணத்துக்கும் கண் இல்லை. ஆண், பெண் , குழந்தை , நல்லவர் மற்றும் கெட்டவர் யாரும் மரணத்திற்கு தெரிவதில்லை.
மனிதர்களே ! மரணம் என்பது மனிதனுக்கு, இயற்கை கொடுக்கும் எச்சரிக்கை. நம் அனைவருக்கும் மரணம் உண்டு . அதனை மனதில் கொண்டு நாம் வாழும் காலத்தில் யாருக்கும் கெடுதல் செய்யாமல் வாழ வேண்டும் . நாம் நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும். நம்முடைய மரணம் மற்றவர்களை பாதிக்க வேண்டும் .
கண்ணீருடன் ,
கே.செல்வா..
Every one will kick the bucket one day..such is life..
ReplyDelete